Friday, 3 August 2018

Seventh second term-science(Tamil)

மனித உடல் அமைப்பு மற்றும் இயக்கம்:
1.தோலுறுப்பு மண்டலத்தில்  தோல், நகம் , வியர்வை சுரப்பி மற்றும் எண்ணெய் சுரப்பி ஆகியவை உள்ளன.
2.செரிமான மண்டலத்தில்  வாய், உணவு குழாய், வயிறு, கல்லீரல், குடல் மற்றும் சுரப்பிகள் ஆகியவை அடங்கும்.

3.செரிமான உணவு உறிஞ்சப்பட்டு இரத்த ஓட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படுகிறது.
4.உணவு ஆக்ஸிஜன் மற்றும் நொதிகளின் உதவியுடன் எளிய பொருள்களாக  சிதைக்கப்படுகின்றன.இதுவே சுவாசித்தல் எனப்படுகிறது.
5.எலும்பு மண்டலத்தில்  எலும்புகள், குருத்தெலும்புகள் மற்றும் நிறமிகள் உள்ளன.
6.மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன.
7.எலும்பு மஜ்ஜையில்  வெள்ளையணுக்கள்,சிவப்பணுக்கள்  மற்றும் இரத்த தட்டுகள் உள்ளன.
8.தசைகள் நம் உடலின் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றன.
9.நம்முடைய முகம் காட்டும் பல்வேறு உணர்ச்சிகள் 40 தசைகளின் செயல்பாடு ஆகும்.
10.நண்டு,கல் இறால் போன்றவற்றின் இரத்தம் நீல நிறமாக காணப்படுகின்றன.
11.கரப்பான் பூச்சியின் இரத்தம் நிறமற்றும் காணப்படுகின்றது.
12.சிவப்பணுவில் உள்ள சிவப்பு நிறமி ஹீமோகுளோபின் ஆகும்.
13.மனிதனின் இயல்பான நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 72 ஆகும்.
14.நரம்பு மண்டலத்தில் இரண்டு அமைப்புகள் உள்ளன. இவை மைய நரம்பு மண்டலம் மற்றும் வெளிப்புற நரம்பு மண்டலம் ஆகும்.
15.நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் வேதிப்பொருளே ஹார்மோன்கள் ஆகும்.
16.ஹார்மோன்கள் இரத்தம் வழியாக பரவுகின்றன.
17.அறையின் வெப்பநிலையில் கெட்டுப்போகும் உணவு அழுகும் பொருள்கள்  என்று அழைக்கப்படுகிறது.
18.அறையின் வெப்பநிலையில் கெட்டுப்போகாத உணவை அலுக்காத  பொருள்கள் என்று அழைக்கப்படுகிறது.
19.பாலை 70-75 டிகிரி வெப்பநிலை வரை குறிப்பிட்ட நேரம் வரை காய்ச்சி,பின்பு வேகமாக குளிரச்செய்வது பாஸ்டியர் முறை ஆகும்.
20.உணவுபதப்படுத்தும் முறைகள் உலர்த்துதல்,வெப்பப்படுத்துதல்,குளிரூட்டல்,உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்தால் ஆகும்.
21.சித்தர்கள் எனப்படும் 18 குறுகளால் சித்த மருத்துவம் தொடங்கப்பட்டது.
22.சித்தர் என்பது சித்தி என்ற சொல்லிலிருந்து தோன்றியது.இதன் பொருள் முடிவற்ற பேரானந்தம் ஆகும்.
23.அகஸ்தியர் சித்த மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
24.நாம் சாப்பிடும் உணவு உடைந்து குளுக்கோசாக மாறுகிறது.இரத்ததில் உள்ள குளுக்கோசின் அளவு 80-120 மி.கி/டெ ஆகும்.
25.குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த கணையம் மூலம் இன்சுலின் சுரக்கப்படுகிறது.



தாவரம் மற்றும் விலங்குகளின் சுவாசம்:
1.24 மணி நேரமும் வேலை செய்யும் உறுப்புகள் மூளை, சிறுநீரகம், நுரையீரல் மற்றும் இதயம் ஆகும்.
2.நாம் உட்கொண்ட உணவு சுவாசித்தலின் போது உயிர்வளியுடன் இணைந்து வேதியியல் மாற்றம் அடைந்து ஆற்றலாக வெளிப்படுகிறது.இதுவே சுவாசித்தல் ஆகும்.
3.மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்தில் 16 முதல் 18 முறை மூச்சு விடுகிறான்.
4.சர்க்கரையை குளுக்கோஸாக மாற்றுவதற்கு பாக்டீரியா மற்றும் பூஞ்சை பயன்படுத்தப்படுகின்றன.
5.உயிர்வளியின் உதவியுடன் நடைபெறும் சுவாசத்திற்கு காற்று சுவாசம் என்று பெயர்.
6.உயிர்வளியின் உதவி இல்லாமல் நடைபெறும் சுவாசத்திற்கு காற்றில்லா சுவாசம் என்று பெயர்.
7.ஈஸ்ட் ஒரு செல் பூஞ்சை என்று அழைக்கப்படுகிறது.
8.சுவாசத்தின் பொழுது வெப்ப ஆற்றல் வெளிப்படுகிறது.
9.நுரையீரல்களுக்கு கீழே வலுவான, தட்டையான தசைத்தொகுப்பு காணப்படுகிறது.இதற்க்கு உதரவிதானம் என்று பெயர்.
10.ஒரு நிமிடத்தில் ஒரு மனிதன் சுவாசிக்க வேண்டிய முறை சுவாச விகிதம் என்று அழைக்கப்படுகிறது.
11.நாம் மூச்சை உள்ளிழுக்கும்பொழுது உதரவிதானம் கீழிறங்கி விலா எலும்பு மேல் புறம் நோக்கி உயர்கிறது.
12.கரியமிலவாயு சுண்ணாம்பு நீரை பாலாக மாற்றும் தன்மையுடையது.
13.ஒலி சுவாச மண்டலத்தின் பயனுள்ள மற்றொரு அமைப்பாகும்.
14.தாவரங்கள் இலைத்துளைகள் என்று அழைக்கப்படும் சிறிய துளைகள் வழியாக மூச்சு விடுகின்றன.
15.தண்டு, வேர் மற்றும் இலைகள் போன்ற தாவரங்களின் அனைத்துப் பகுதிகளும் சுவாசிக்கின்றன.



பருப்பொருகள் மற்றும் அதன் தன்மைகள்:
1.படிகங்கள் அவற்றின் கரைசலில் இருந்து பெறப்படுவதற்கு படிகமாகுதல் என்று பெயர்.
2.வெப்பப்படுத்தும் பொழுது திரவமாக மாறாமல் நேரடியாக வாயுநிலைக்கு மாறும் நிகழ்வுக்கு பதங்கமாதல் என்று பெயர்.
3.ஒரு பொருளின் இயற்பியல் பண்பில் மாற்றம் நிகழ்த்தும் வேதி சேர்மத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நிகழும் நிகழ்வுக்கு இயற்பியல் மாற்றம் என்று பெயர்.
4.செம்பழுப்பு நிற படலம் ஒரு பொருளின் மேல் உருவாகும் நிகழ்வு துருபிடிதல் ஆகும்.
5.காற்றில் உள்ள ஆக்சிஜன் மற்றும் நீருடன் இரும்பு சேர்ந்து நீரோட்டம் பெற்ற இரும்பு ஆக்சைடு ஆகா மாறுகிறது.இந்நிகழ்வு துருப்பிடித்தல் எனப்படுகிறது.
6.காய் மற்றும் பழங்களில் உள்ள பினாலிக் சேர்மம் காற்றில் உள்ள ஆக்சிஜன் உடன் சேர்ந்து பழுப்பு நிறமாக மாறுகிறது.
7.பினாலிக் சேர்மம் காற்றில் உள்ள ஆச்சிஜன் உடன் சேர்ந்து மெலனின் என்ற பொருளாக மாறுகிறது.
8.அமிலம் லத்தீன் வார்த்தையான அசிடஸிலிருந்து பெறப்பட்டது.அதற்க்கு புளிப்பு என்று பொருள்.
9.பொதுவாக அமிலங்கள் இடப்பெயர்ச்சி செய்யத்தக்க ஹைட்ரஜன் பெற்றுள்ளது.
10.தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் அமிலங்கள் கரிம அமிலம் என்று அழைக்கப்படுகின்றன.
11.கனிமங்களிலிருந்து பெறப்படும் அமிலங்கள் கனிம அமிலம் என்று அழைக்கப்படுகின்றன.
12.HNO3, H2SO4 மற்றும் HCl கண்ணாடி மற்றும் மட்பாண்டங்களை அரிக்காது.
13.கசப்பு மற்றும் சோப்பு போன்று வளுவளுப்பாக உள்ள பொருட்கள் காரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
14.உலோக ஆக்ஸைடு மற்றும் ஹைட்ராக்சைடு சேர்மங்கள் காரங்கள் எனப்படும்.
15.சோடியம் ஹைட்ராக்சைடு மற்றும் பொட்டாசியம் ஹைட்ராக்சைடு மிகவும் அரிக்கும் தன்மை கொண்டவை.
16.காரங்கள் நீருடன் சேரும் பொழுது ஹைட்ராக்சைடு அயனியைக் கொடுக்கும்.
17.தண்ணீரில் கரையக்கூடிய காரங்கள் அல்கலிஸ் என்று அழைக்கப்படுகின்றன.
18.அல்கலி என்பது அரபு சொல்லிலிருந்து வந்ததாகும்.இதற்கு மரச்சாம்பல் என்று பொருள்.
19.இந்த சாம்பல் சோடியம் மற்றும் பொட்டாசியம் கார்பனேட் காலால் ஆனது.
20.ஒரு பொருள் காரமா அல்லது அமிலமா என்பதைக் கண்டறிய  நிறங்காட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.
21.அமில அல்லது காரங்களில் அறிமுகப்படுத்தும்போது நிறங்காட்டிகள் வண்ணத்தை மாற்றுகின்றன.
22.லிட்மஸ், மெத்தில் ஆரஞ்சு மற்றும் பினாப்தலின் ஆகியவை ஆய்வகத்தில் நிறங்காட்டியாக பயன்படுத்தப்படுகின்றன.
23.மஞ்சள், சிவப்பு முட்டைக்கோஸ் சாறு மற்றும் பீட்ரூட் சாறு இயற்கை நிறங்காட்டிகள்.
24.பொதுவாக பயன்படுத்தப்படும் இயற்கை நிறங்காட்டிகள் லிட்மஸ்.
25.லிட்மஸ் லைக்கன்ஸில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.
26.நீரில் லிட்மஸ்சின் நிறம் ஊதாவாக இருக்கும்.அமிலத்தில் சிவப்பாக இருக்கும்.
27.லிட்மஸ் காகிதம் பொதுவாக நீல & சிவப்பு நிறங்களில் இருக்கும்.
28.நடுநிலை கரைசல் வடிகட்டிய நீர் ஆகும்.
29.மனித உடலில் உள்ள செல்கள் அமிலத்தைக் கொண்டிருக்கின்றன.
30.மனித உடலில் உள்ள செல்களில் டி அக்ஸிரிபோ நியூக்ளிக் அமிலம் உள்ளது.
31.புரோட்டின்கள் உடல் கட்டமைப்புக்கு உதவுகின்றன.இது அமினோ அமிலத்தைக் கொண்டிருக்கின்றன.
32.கொழுப்பில் கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
33.கந்தக அமிலம் அமிலத்தின் ராஜா என்று அழைக்கப்படுகிறது.

34.வயிற்றில் ஹைட்றோகுளோரிக் அமிலம் உருவாகிறது.
35.துத்தநாகம் கார்பனேட், பேக்கிங் சோடா அல்லது கற்றாழை ஆகியவற்றைத் தேய்ப்பதன் மூலம் ஒரு எறும்பு கடிவைத் தடுக்கலாம்.
36.கால்சியம் பாஸ்பேட் மற்றும் கால்சியம் லாக்டேட் சரியான உடல் இயங்க தேவைப்படுகிறது.
37.சோடியம் குளோரைடு உணவைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகிறது.
38.சோடியம் பைகார்பனேட் கேக்குகளில் பயன்படுத்தப்படுகிறது.
39.அலுமினிய சல்பேட் மற்றும் நீரேற்றப்பட்ட பொட்டாசியம் நீர் சுத்திகரிக்கப்  பயன்படுகிறது.
40.சோடியம் கார்பனேட் சலவை சோடா தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
41.காப்பர் சல்பைடு பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது.
42.பொட்டாசியம் நைட்ரேட் வெடிமருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
43.மக்னீசியம் ஹைட்ராக்சைடு மெக்னீசியா பால்மம் என்று அழைக்கப்படுகிறது.
44.வினிகரில் அசிட்டிக் அமிலம் உள்ளது.
45.எலுமிச்சை சிட்ரிக் அமிலத்தை கொண்டுள்ளது.
46.தக்காளி ஆக்ஸலிக் அமிலத்தைக் கொண்டுள்ளது.
47.திராட்சை டார்ட்டாரிக் அமிலத்தைக் கொண்டுள்ளது.
48.பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது.
49.எறும்பில் பார்மிக் அமிலம் உள்ளது.
50.ஆப்பிள் மாலிக் அமிலம் கொண்டுள்ளது.



மின்னியல்:
1.மின்சாரம் வெகு தொலைவிற்கு செல்லும் வகையில் அதன் மின்னழுத்தம் அதிகரிக்கப்படுகிறது.
2.வேதியியல் ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் சாதனம் செல் என்று அழைக்கப்படுகிறது.
3.மின்கலத்தில் இரண்டு வெவ்வேறு உலோக தகடு மின்பகுபொருள் எனப்படும்.
4.மின்பகுபொருள்கள் வேதிப்பொருகளினுள் வைக்கப்பட்டுள்ளன.
5.மின்பகுபொருள்கள் நேர்மின்னூட்டம் மற்றும் எதிர்மின்னூட்டத்தை உண்டாக்குகின்றன.
6.முதன் முதலில் லூயி கால்வானி என்பவரால் மின்கலம் உருவாக்கப்பட்டு அலெக்சாண்டரோ வோல்டா என்பவரால் மேம்படுத்தப்பட்டது.
7.மின் சுற்றி என்பது மின்கலத்தின் நீர்முனையில் இருந்து எதிர் முனைக்கு மின்னுட்டம் செல்லும் தொடர்ச்சியான மூடிய பாதை ஆகும்.
8.கால்வனோமீட்டர் ஒரு வட்டத்தில் தற்போதைய மின்னோட்டத்தை கண்டறிய பயன்படும் கருவி ஆகும்.
9.மின்சாரம் பாயும் கம்பியில் உற்பத்தி ஆகும் வெப்பம் நடப்பு ஓட்டம் மற்றும் கால அளவையும் சார்ந்துள்ளது.
10.மின் வெந்நீர் கொதிக்கலத்தில் நிக்ரோம் உள்ளது.
11.மின்விளக்கில் டங்ஸ்டன் இழை உள்ளது.
12.மின்சுற்றுதிறப்பான் என்பது அதிகப்படியான மின்னோட்டம் செல்லும்போது பாதுகாக்கும் தானாக இயங்கும் ஒரு சுவிட்ச் ஆகும்.
13.மின்னோட்டம் செல்லும் கம்பியை சுற்றி காந்தப்புலன் இருப்பதை கண்டுபிடித்தவர் கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட் ஆவர்.
14.மின்கலம் இரண்டு வகையானது.அவை முதன்மை மற்றும் இரண்டாம்நிலை மின்கலம் ஆகும்.
15.காற்றாலை ஆற்றல் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.

1 comment: