Thursday, 29 March 2018

Seventh First Term-Science(Tamil)

அன்றாட வாழ்வின் விலங்குகளின் பங்கு:
1.உணவு தரும் விலங்குகள் கோழி மற்றும் ஆடு ஆகும்.
2.உரோமம் தரும் விலங்குகள் செம்மறி ஆடு,வெள்ளாடு மற்றும் லாமா.
3.இழுவை விலங்குகள் காளை மாடு,எருது ஆகியனவாகும்.
4.பெயிண்ட் தயாரிக்கப் பயன்படுவது அரக்கு.
5.கம்பளி புரதம் ஆல் ஆனது.
6.செம்மறி ஆட்டில் இருந்து பெறப்படும் உரோமம் சொரசொரப்பான உரோமம்&மிருதுவான மெல்லிய உரோமம்.
7. கம்பளி எடுக்கும் புதிய முறைக்கு பயோகிளிப் என்று பெயர்.
8.செம்மறி ஆட்டின் மேற்புறத்தோலில் இருந்து மெல்லிய அடுக்காக உள்ள உரோமங்களை  வெட்டுகின்ற முறையே உரோமத்தைக் கத்தரித்தல் எனப்படும்.
9.மிகச் சிறந்த பட்டு இழை என்று கருதப்படுவதுமல்பெரி புழுக்களில் இருந்து பெறப்படும் பட்டு.
10.தூயபட்டை இழைகளின் ராணி என்று அழைக்கிறோம்.
11.பல்வேறு பட்டு வகைகள் மல்பெரி பட்டு,டஸார் பட்டு,ஏரி பட்டு மற்றும் முகா பட்டு.
12.பட்டுக் கூட்டில் இருந்து இதழ்களைப் பிரித்து எடுக்கும் முறைக்குச் சுருளுதல் எனப் பெயர்.
13.சீனாவைச் சேர்ந்த சை லிங் சி என்ற பேரரசி தான் முதலில் பட்டைக் கண்டுபிடித்ததாக நம்பப்படுகிறது.
14.இந்தியா உலகின் பட்டு உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
15.இத்தாலியா இனமான ஏபிஸ் மெல்லிபெராதேனீ  வளர்ப்பிற்கு உகந்த இனம்.



16.21 நாள்கள் கழித்து முட்டையில் இருந்து குஞ்சி பொரிக்கும்.
17.இந்தியாவில் முட்டை உற்பத்தியை அதிகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடைமுறைக்கு வெள்ளிப்புரட்சி என்று பெயர்.
18.தேனீகள் கூட்டமாக வாழும்.தேன் கூடு சிறிய அறைகளால் ஆனது.
19.இந்திய தேனீ வகைகள் பாறை தேனி (ஏபிஸ் டார்சோட்டா),சிறிய தேனீ (ஏபிஸ் புளோரியா) மற்றும் இந்திய தேனீ (ஏபிஸ் இண்டிகா).
தேனீக்களின் வகைகள்:
1.இராணி தேனீ:
  • வளமான பெண் தேனீ (ஒரே ஒரு தேனீ ).
  • முட்டை இடுகிறது.
2.டிரோன்:
  • வளமான ஆண் தேனீ (நூற்றுக்கணக்கான தேனீ).
  • இனப்பெருக்கம் செய்ய உதவும்.
3.வேலைக்காரத் தேனீகள்:
  • மலட்டுப்  பெண் தேனீ (ஆயிரக்கணக்கான தேனீக்கள்).
  • பல்வேறு வேலைகளைச் செய்கின்றன.
20.தமிழ்நாட்டில் உள்ள வனவிலங்கு சரணாலயங்கள் வேடந்தாங்கல்,முதுமலை,முண்டந்துறை,களக்காடு மற்றும் கோடியக்கரை ஆகும்.



தாவரங்கள்,விலங்குகளின் உண்வூட்டம்:
1.உயிரினங்கள் உணவை உட்கொள்ளும் முறையும் அதனைப் பயன்படுத்தும் முறையும் உண்வூட்டம் எனப்படுகிறது.
2.உண்வூட்ட முறை இரண்டு வகைப்படும்.அவை தற்சார்பு ஊட்டமுறை மற்றும் பிற சார்பு ஊட்டமுறை ஆகும்.
3.தாவரங்கள் உணவிற்காக மற்ற தாவரங்களைச் சார்ந்து உள்ளன.இதை சாறுண்ணிகள் என்பர்.
4.மரங்களின் தண்டுகளைச் சுற்றி வளரும் தாவரத்தின் பெயர் கஸ்குட்டா.
5.இரு வேறுபட்ட உயிரினங்கள் ஒன்றாக இணைந்து வாழ்ந்து ஒன்று மற்றொன்றால் பயனடைந்தால்,அது கூட்டுயிர் வாழ்க்கை முறை எனப்படும்.
6.பொதுவாக விலங்குகள் திட உணவுகளை உட்கொள்ளுகின்றன. இது முழுவிழுங்கு ஊட்டமுறை ஆகும்.

7.அமீபா:
  • திட உணவுகளை உட்கொள்ளுகின்றது.
  • பொய்க்கால்கள் மூலமாக உணவை உட்கொள்ளுகின்றன.
  • உணவுக்குமிழிக்குள் நொதிகளின் உதவியால் உணவு செரிக்கப்படுகிறது.
8.வாய்க் குழியினுள் மூன்று ஜோடி உமிழ் நீர்ச் சுரப்பிகள் உள்ளன.
9.ஸ்டார்ச் செரித்தலுக்கு உதவும் நொதி அமைலேஸ்.
10.குடல் தசைகள் சீராக சுருங்கி விரிவதனால் உணவு அலைபோன்று செல்கின்றது .இதை குடல் தசை அலைவு என்று பெயர்.

11.சிறு குடல்:
  • 7 மீட்டர் நீளம் உள்ளது.
  • உணவு பித்த சாறு, கணைய சாறு மற்றும் குடல் சாறு ஆகியவற்றுடன் கலக்கிறது.
  • கார்போஹைட்ரேட்டுகள் சிதைந்து குளுகோஸாகவும்,புரதங்கள் சிதைந்து அமினோ அமிலங்களாகவும்,கொழுப்புகள் சிதைந்து கொழுப்பு அமிலங்களாகவும் மாறுகின்றன.
  • சிறு குடலில் உள்ள குடலுறிஞ்சிகள் மூலம்  உறிஞ்சப்படுகிறது.
12.பெருங்குடலின்:
  • 1.5 மீட்டர் நீளம் உள்ளது.
  • நீர் உறிஞ்சுவதில் உதவுகிறது.
  • செரிக்கப்படாத உணவைத் தாற்காலிகமாகச் சேகரிக்கிறது.
  • செரிமானம் நடக்காது.



13.பால் பற்கள்:
  • மொத்தம் 20 பற்கள் உள்ளன.
  • 7-8 வயது வரை வளரும்.
14.நிலைத்த பற்கள்:
  • பால் பற்களுக்குப் பிறகு வளரும்.
  • மொத்தம் 32 பற்கள் உள்ளன.
15.பேர்களின் வகைகள்:
1.வெட்டுப்பற்கள்:
  • உளிபோன்று காணப்படுகிறது.
  • ஒவ்வொரு தாடையிலும் நான்கு  பற்கள் உள்ளன(8 பற்கள்).
2.கோரைப்பற்கள்:
  • கூரிய முனை உள்ள பற்கள்.
  • ஒவ்வொரு தாடையிலும் இரண்டு பற்கள் உள்ளன (4 பற்கள்).
3.முன்கடைவாய்ப்பற்கள்:
  • உணவை மெல்லவும் அரைக்கவும் பயன்படுகின்றன.
  • ஒவ்வொரு தாடையிலும் நான்கு பற்கள் உள்ளன.(8 பற்கள்)
4.பின்கடைவாய்ப்பற்கள்:
  • முன்கடைவாய்ப்பற்களை விட அகன்ற பாராப்பை உடையது.
  • ஒவ்வொரு தாடையிலும் 6 பற்கள் உள்ளன.(12 பற்கள்).
16.அவசரமாக உட்கொண்ட புற்களை இரைப்பையில் உள்ள முதல் அறையில் சேகரிக்கிறது.இதற்கு ருமன் எனப் பெயர்.
17.அசைபோடும் பாலூட்டிகளில் ஒரு வகையான பைபோன்று காணப்படும் உறுப்பிற்கு சீக்கம் எனப் பெயர்.
18.இந்தப்பையில் பாக்டீரியாக்கள் சுரக்கும் நொதிக்கு செல்லுலேஸ் எனப் பெயர்.



நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்:
1.அறிவியல் உலகில் நிறை மற்றும் குறிப்பிட்ட இடத்தை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை பருப்பொருள்கள் ஆகும்.
2.பருப்பொருள்களில் உள்ள சிறு துகள்கள் அணுக்கள் & மூலக்கூறுகள்.
3.அணுக்கள் & மூலக்கூறுகள் மிக சிறியவை.அதை நேனோமீட்டர் (10^-9) அலகால் அளக்கலாம்.
4.மூலக்கூறுகள் தொடர்ந்து நகர்ந்து ஒன்றோடு ஒன்று கலக்கின்றன.
5.பருப்பொருள்களில் மூலக்கூறுகளுக்கு இடையே ஈர்ப்புவிசை உள்ளது.
6.பொருள்களின் நிலைகள் திண்மம்,திரவம் மற்றும் வாயு ஆகும்.
பொருள்களின் மற்ற நிலைகள்:
  • நான்காவது நிலை அல்லது பிளாஸ்மா நிலை என்பது அதிக வெப்பப்படுத்தப்பட்ட வாயு நிலை.
  • ஐந்தாம் நிலை அல்லது போஸ் ஐன்ஸ்டீன் காண்டன்ஸேட் நிலை என்பது அதிக குளிரூட்டப்பட்ட திடப்பொருள்.
7.வாயு மூலக்கூறுகள் கொள்கலன் முழுவதும் பரவி இருக்கும்.



அளவீட்டியல்:
1.பொருள் ஒன்று அடைத்துக்கொள்ளும் இடத்தின் அளவு பருமன் எனப்படும்.
2.அணைக்கட்டுகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் கன அளவு ஆயிரம் மில்லியன் கன அடி.
3.நீரைவிட அடர்த்தியான திரவம்பாதரசம்.
4.நீரைவிட இலேசான திரவம் எண்ணெய்.
5.நீரின் அடர்த்தி 1000 கிகி/மீ^ 3.
6.பாதரசத்தின் அடர்த்தி நீரின் அடர்த்தியைப்  போல 13.6 மடங்கு மடங்கு.
7.இரும்பின் அடர்த்தி 7800 கிகி/மீ^ 3.
8.கலிலியோ தனி  ஊசளைக் கண்டுபிடித்தார்.
9.வெற்றிகரமாக முதலாவது ஊசல் கடிகாரம் கிறிஸ்டியன் ஹைஜன்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
10.குண்டானது ஒரு முனையில் இருந்து மறுமுனைக்குச் சென்று மீண்டும் அதே முனைக்குத் திரும்பினால் அது ஒரு அலைவு எனப்படும்.
11.ஊசல் தொங்கவிடப்படும் புள்ளிக்கும் குண்டின் மையத்திற்கும் இடையே உள்ள தூரம் ஊசலின் நீளம் எனப்படும்.
12.ஓய்வு நிலையில் இருந்து குண்டானது இழுத்து விடப்படும் தொலைவு வீச்சு எனப்படும்.
13.குண்டின் அளவு,வீச்சு மாறுபடும் போது அலைவு நேரம் மாறுபடுவது இல்லை.
14.நீளம்  மாறுபடும் போது அலைவு நேரம் மாறுபடும்.
15.வானியல் அலகு (1.496*10^11 மீ )என்பது புவிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட சராசரித் தொலைவு ஆகும்.
16.ஒளி ஆண்டு (9.46*10^12 கிமீ) என்பது வெற்றிடத்தில் ஒளியானது ஒரு வருடத்தில் கடக்கும் தொலைவு ஆகும்.
17.ஒளி ஒரு வினாடியில் மூன்று இலட்சம் கிமீ தூரம் செல்லும்.
18.ஒளியின் திசையில் வேகத்தில் பயணித்தால் ஒரு வினாடியில் ஏழரை முறை உலகத்தைச் சுற்றலாம்.
19.பொருள் லேசானதா கனமானதா என்பதைக் குறிப்பது அடர்த்தி ஆகும்.
20.ஒரு ஏக்கர் என்பது 4027 மீ ^ 2 ஆகும்.
21.1 ஏக்கர் என்பது 100 சென்ட் ஆகும்.
22.1 ஹெக்டேர் என்பது 2.47 ஏக்கர் ஆகும்.
23.1 மீட்டர் என்பது  3.28 அடி ஆகும்.



இயக்கவியல்:
1.வாகனம் கடந்த மொத்த அளவிடும் கருவி ஓடோமீட்டர் எனப்படும்.
2.அனிமோமேட்டர் என்பது காற்றின் வேகத்தை அளவிடப்பயன்படும்.
3.திசை வேகம் = இடப்பெயர்ச்சி / எடுத்துக்கொண்ட நேரம்.
4.முடுக்கம்= திசைவேக மாறுபாடு / எடுத்துக்கொண்ட நேரம்.
5.ஏலகிரி மலைத்தொடர்கள் தமிழ்நாட்டில் பறத்தல் விளையாற்றிக்கு ஏற்றது.



தாவர புற அமைப்பியல்:
1.வார்மிங் தாவரங்களை மூன்று வகைகளாகப் பிரித்தார்.அவை
1.நீர்வாழ்த் தாவரங்கள் என்பன அதிக நீர் உள்ள பகுதியில் வாழ்வன.
2.இடை நிலத் தாவரங்கள் என்பன மிதமான நீர் உள்ள பகுதியில் வாழ்வன
3.வறண்ட நிலத் தாவரங்கள் என்பன வறண்ட நிலப் பகுதியில் வாழ்வன
தண்டுகளின் வகைகள்:
  • சிறு செடி கட்டைத் தன்மை அற்ற தண்டுகளைக் கொண்டன.
  • புதர்ச் செடி கட்டைத் தன்மை உடைய  தண்டுகளைக் கொண்டது.
  • மரங்கள் கடினமான தண்டுகள் உடையன.
2.கருவின் முனைவேரிலிருந்து தோன்றி அதிக ஆழம் வரை செல்லும் முதன்மை வேர்கள் ஆணிவேர்த் தொகுப்பு ஆகும்.
3.ஆணிவேர்த் தொகுப்பு இரண்டாம் நிலை & மூன்றாம் நிலை வேர்கள் வேர்களை உருவாக்குகின்றன.
4.முளைவேர் தவிர தாவரத்தின் வேறெந்தப் பகுதியில் இருந்தும் வளரும் வேர் வேற்றிடவேர்த்தொகுப்பு எனப்படும்.
5.வேற்றிடவேர்த்தொகுப்பு கொத்தாக நார்கள் போன்று தோற்றம் அளிப்பதால் சல்லி வேர்த்தொகுப்பு எனவும் அழைக்கப்படுகின்றன.
6.கருவின் முளையிலிருந்து தண்டு வளர்கிறது.
8.இரண்டு கணுக்களுக்கு இடையே உள்ள தூரம் கணுவிடைப் பகுதி எனப்படும்.
9.இலைகள் சிறு துளைகள் மூலம் வாயுக்களை பரிமாற்றம் செய்கின்றன.
10.இலையிலுள்ள அதிகப்படியான நீரை இலைத்துளை வழியாக நீராவியாக வெளியேற்றும் நிகழ்ச்சி  நீராவிப் போக்கு எனப்படும்.
11.மலர் மொட்டாக இருக்கும் பொது புல்லி வட்டம் பாதுகாக்கிறது.
12.பிரகாசமான நிறமுடைய மலரின் பகுதி அல்லி இதழ் எனப்படும்.
13.மலரின் பெண்பாகம் சூலக வட்டம்.
14.நீல நிற குறிஞ்சிப் பூ இருப்பதனால் அந்த மலைக்கு  நீலகிரி என்று பெயர்.

15.சேமிப்பு வேர்:
  • கூம்பு வடிவ வேரின் மேற்பகுதி அகன்றும் அடிப்பகுதி குறுகியும கண்ணப்படும்(எ.கா - கேரட்).
  • கதிர் வடிவ வேரின் மையப்பகுதி பருந்தும் இரு முனைகளும் குறுகியும் கண்ணப்படும்(எ.கா - முள்ளங்கி).
  • பம்பர வடிவ வேரின் மேற்பகுதி அகன்றும் அடிப்பகுதி நுனி திடீரென வால் போன்று சுருங்கியும் காணப்படும்(எ.கா - டர்னிப் ).
16.கடற்கரை ஓரம் உள்ள சதுப்பு நிலங்களில் உள்ள தாவரங்கள் உப்பு நீருக்குள் புதைந்து இருக்கும்.எனவே செங்குத்தான வேர்கள் கிளம்பி தரைக்கு மேல் வளர்கின்றன.இது சுவாச வேர் வேர்கள் ஆகும்.
17.தாவரங்கள் ஏதேனும் ஒரு புறக்காரணியின் தூண்டலுக்கு ஏற்ப வளர்வதற்கு சார்பசைவு என்று பெயர்.
18.தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்று கண்டுபிடித்தவர் J.C.போஸ்.
19.தொட்டாற்சிணுங்கி தாவரம் தொடுதலுக்கு பதில்வினை செய்கிறது.

20.சார்பசைவு வகைகள்:
  • ஒளிச் சார்பசைவு சூரிய ஒளியை நோக்கி வளரும்.
  • புவிச் சார்பசைவு புவிஈர்ப்புத் திசையை நோக்கி வளரும்.
  • நீர்ச் சார்பசைவு நீரின் திசையை நோக்கி வளரும்.



வகைப்பாட்டியல்:
1.பல்வேறு உயிரினங்கள் பல்வேறு பண்புகளுடன் காணப்படுகின்றன.
இதுவே  பல்லுயிர்த்தன்மை ஆகும்.
2.R.H.விட்டேக்கர் உயிரினங்களின் ஐந்து உலகங்களாக அறிமுகப்படுத்தினார்.
3.ஐந்து உலகங்கள் எனப்படுவது மொனிரா,புரொடிஸ்டா,பூஞ்சைகள்,தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகும்.
4.. பாக்டீரியாவின் வடிவங்கள் கோல் வடிவம்,கோள வடிவம்,காற்புள்ளி வடிவம் மற்றும் சுருள் வடிவம் ஆகும்.
5.பாலில் உள்ள பாக்டீரியா லேக்டோ பேசில்லஸ்.
6.ஒரு மனிதனின் குடலில் சராசரியாக ஒரு கிலோ பாக்டீரியாக்கள் உள்ளன.
7. தாவரங்களில் பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள் கழலை நோய்(எலுமிச்சை),வளைய அழுகல் நோய் (உருளைக்கிழங்கு),தீ வெப்பு நோய் (ஆப்பிள்) மற்றும் வாடல் நோய் (தக்காளி) ஆகும்.
8. மனிதர்களுக்கு பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள் காசநோய்,காலரா,தொழுநோய் மற்றும் பிளேக்.
9.தாவர புரோட்டீஸ்டாக்கள் நுண்ணிய பாசிகள் எனப்படும்.
10.விலங்குப் புரோட்டீஸ்டாக்கள் புரோட்டோசோவன்கள்  எனப்படும்.
11.அனைத்து ஒரு செல் தாவரங்களும் தாவர மிதவை  உயிர்கள் எனப்படும்.
12.அனைத்து ஒரு செல் விலங்குகளும் விலங்கு மிதவை உயிர்கள் எனப்படும்.
13.யூக்ளினா இரண்டு வகையான ஊட்டமுறையைக் கொண்டுள்ளது.இதற்க்கு
கலப்பு ஊட்டமுறை என்று பெயர்.
14.கரியமிலவாயுவை ஈஸ்ட் மூலம் சர்க்கரை கரைசலை ஆல்கஹாலக மாற்றுவது நொதித்தல்.
15.மனிதன் முதுகு நாணுள்ளவை தொகுதியைச் சேர்ந்தவன்.
16.மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் ஹிப்போ கிரெட்டஸ் மருத்துவத்தின் அடிப்படையில் விலங்குகளை வகைப்படுத்தினார்.
17.அரிஸ்டாட்டில் & தியோஃப்ராஸ்டஸ் ஆகியோர் உயிரினங்களின் வடிவம்,வாழ்விடத்தின் அடிப்படையில் தாவரங்களையும் விலங்குகளையும் வகைப்படுத்தினர்.
18.ஜான் ரே என்பவர் சிற்றினம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார்.
19.கரோலஸ் லின்னேயஸ் எளிய முறையில் தாவரங்களின் பெயரிடும் முறையை உருவாக்கினார்.
20.பூஞ்சையின் செல் சுவர் கடுமையான கூட்டுச் சர்க்கரையால் ஆன
கைட்டின் என்ற பொருளால் ஆனது.

No comments:

Post a Comment