Wednesday, 21 March 2018

Sixth Third Term-Social(Tamil)

நாம் வாழும் பூமி:
1.உயரமான முகடுகளைக் கூடிய அமைப்பே மலை ஆகும்.
2.பல மலைகள் தொடர்ச்சியாக அமையும்போது அது மலைத் தொடர் ஆகும்.
3.சுற்றியுள்ள நிலப்பகுதிகளை விடச் சற்று உயரமாகவும்,அதன் மேற்பரப்பில்
தட்டையாகவும் உள்ள நில அமைப்பு பீடபூமி  எனப்படுகிறது.

4.பறந்து விரிந்த தாழ்வான சமமான நிலப்பரப்பே சமவெளி எனப்படுகிறது.
5.கடல்கள் இன்றித் தொடர்ச்சியாக உள்ள நிலப்பரப்பை கண்டங்கள் என்கிறோம்.
6.நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட ஆஸ்திரேலியா ஒரு தீவுக்கண்டம் ஆகும்.
7.பாரதி ஆராய்ச்சிக் குடியிருப்புகள் அண்டார்டிகாவில் உள்ளன.
8.பல தீவுகள் அமையப் பெற்றதை தீவுக்கூட்டங்கள் என்கிறோம்.
9.பசிபிக் பெருங்கலைச் சுற்றிலும் எரிமலைகள் உள்ளதால் அதை பசிபிக் நெருப்பு வளையம் என்கிறோம்.
10.சூறாவளிகள் அட்லாண்டிக் பெருங்கடலில் அதிகம் தோன்றுகின்றன.
11.நிலப்பகுதிகள் கொண்ட பூமியின் மேற்பகுதி நிலக்கோளம் ஆகும்.
12.நீர் தேங்கிய பகுதிகள் நீர்க்கோளம் ஆகும்.
13.காற்று படர்ந்த பகுதி வளிமண்டலம் ஆகும்.
14.பூமியில் உயிர்கள் வாழும் கோளம் உயிர்க்கோளம்.
15.மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதிக்கு தீபகற்பம் என்று பெயர்.



16.இரண்டு நிலப்பரப்புகளை பிரிக்கும் குறுகிய நீர்ப்பகுதிக்கு நீர்ச்சந்தி என்று பெயர்.
17.மூன்று பக்கமும் நிலமாகவும் ஒரு பக்கம் கடலாகவும் அமைந்த நீர்ப்பரப்பு
விரிகுடா ஆகும்.
18.அளவில் சற்றே சிறியதாக இருந்தால் அதை வளைகுடா என்பர்.
19.விரிந்த இரண்டு நீர்ப்பரப்புகளைப் பிரிக்கும் மிகக்குறுகிய நிலப்பரப்பை நிலச்சந்தி என்று அழைப்பார்கள்.

ஐந்து பெருங்கடல்கள்:
20.பசிபிக் பெருங்கடல்:
  • உலகின் ஆழமான கடல்.
  • ஆழமான மெரினா அகழி இங்கே அமைந்துள்ளது.
21.அட்லாண்டிக் பெருங்கடல்:

  • உலகின் இரண்டாவது பெருங்கடல்.
  • சூறாவளிகள் இங்கே பொதுவானவை.
22.இந்தியப் பெருங்கடல்:
  • உலகின் மூன்றாவது பெரிய கடல்.
  • இந்தியாவின் பருவகால மழைகள்  இங்கு இருந்து வருகின்றன.
23.அண்டார்டிக் பெருங்கடல்:
  • தென் பெருங்கடல் என்றும் அழைக்கப்படுகிறது.
24.ஆர்டிக் பெருங்கடல்:
  • உலகின் மிகச் சிறிய பெருங்கடல்.
  • பல பனிப் பாறைகள்  உள்ளன.
  • வட துருவம் சுற்றி அமைந்துள்ளது.



ஏழு கண்டங்கள்:
25.ஆசிய:
  • உலகின் மிகப்பெரிய கண்டம்.
  • கோபி பாலைவனம்  இங்கே உள்ளது.
26.ஆப்பிரிக்கா:
  • இது இரண்டாவது மிகப் பெரிய கண்டம்.
  • பூமத்திய ரேகை இக்கண்டத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்கிறது.
27.வட  அமெரிக்கா:
  • ராக்கி மலைகள் இங்கே அமைந்துள்ளது.
28.தென் அமெரிக்கா:
  • உலகின் நீளமான மலைத்தொடரான ஆண்டிஸ் இங்கு அமைந்துள்ளது.
  • உலகின் மிகப்பெரிய நதியானா அமேசான் இங்கே உள்ளது.
29.ஐரோப்பா:
  • இது ஆல்ப்ஸ் மலைகளைக் கொண்டது.
30.ஆஸ்திரேலியா :
  • பிஜி தீவு, பப்புவா நியூ கினியா முதலிய தீவுகள் ஓசியானியத் தீவுகள் ஆகும்.
  • ஆஸ்திரேலியாவின் கிழக்கு கரையோரத்தில் பாரியர் ரீப் உள்ளன(பெரிய பவள பாறைகள்).
31.அண்டார்டிகா:
  • முற்றிலும் பனியால் மூடப்பட்டிருக்கும்.
  • பெங்குவின் & சீல்ஸ் இங்கே வாழும் உயிரினங்கள் ஆகும்.



நிலவரைபடங்களும் உலக உருண்டையும்:
1.புவியின் வடிவம் உருண்டை என்று கூறியவர் பித்தாகரஸ்.
2.விண்வெளி வீரர்களுக்குப் பூமி நீலநிறக் கோளமாகவும்,ஆங்காங்கே பச்சை மற்றும் பழுப்பு நிறத்தில் தோன்றியது.
3.புவியின் வடிவம் எதிர்புறங்களில் தட்டையாக உள்ள கோள வடிவம்.
4.கண்களில் தெரியும் ஒரு முழு பரப்பைக் காகிதத்திலோ துணியிலோ குறிப்பிடுவது நிலவரைபடம் ஆகும்.
5.உண்மையான தூரத்தை அனுமானிக்க முடியாத படங்கள் மாதிரி வரைபடங்கள் ஆகும்.
6.ஒரு வரைபடத்தில் திசைமேல் பகுதியில் வலது மூலையில் குறிக்கப்பட்டு இருக்கும்.
7.அளவை என்பது வரைபடத்தில் உள்ள இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரத்திற்கும் புவியின் மீது அதே இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள உண்மையான தூரத்திற்கும் உள்ள விகிதம் ஆகும்.
8.முதலில் அட்ச,தீர்க்கக் கோடுகளை நிலவரைபடதில் வரைந்தவர் டாலமி.
9.அட்சக் கோடுகள்(90N ​​+ 90S = 180 டிகிரி அட்சரேகை)என்பன கிடைமட்டமாக கிழக்கு மேற்காக பூமியின் மீது வரையப்பட்ட கற்பனைக் கோடுகள் ஆகும் (0-90 டிகிரி).
10.தீர்க்கக் கோடுகள்(180E + 180W = 360 டிகிரி தீர்க்கக் கோடு) என்பன புவியின் மீது செங்குத்தாக அல்லது வடக்குத் தெற்காக வரையப்பட்ட  கற்பனைக் கோடுகள் ஆகும் (0-180டிகிரி).
11.தீர்க்கக் கோடுகள் ஆங்கிலத்தில் மெரிடியன்ஸ் என அழைக்கப்படுகினறன.
12.1 டிகிரி தீர்க்க / அட்சரேகையானது 69 மைல் அல்லது 111 கிலோமீட்டர்  தூரத்திற்குச் சமமானது.
13.கிரீன் விச் தீர்க்கக்கோடுகளை 0 டிகிரி தீர்க்கக் கோடுகள் எனவும் அழைப்பர்.



உள்ளாட்சி:
1.ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி,மாவட்ட ஊராட்சி,நகராட்சி&மாநகராட்சி ஆகிய அமைப்புகளுக்கு உள்ளாட்சி நிருவாகம் என்று பெயர்.
2.ரிப்பன் பிரபு என்பவர் நம் நாட்டில் விடுதலைக்கு முன்பே உள்ளாட்சி நிருவாகத்தை நிறுவினார்.
3.மத்திய மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம் மூலம் ஊராட்சிக்கு வழங்குகின்றன.
4.கிராமத்தின் வளர்ச்சிக்குரிய திட்டங்கள்,ஆண்டு வரவு செலவு திட்டங்கள் அனைத்தும் ஊர் மன்றக்கூட்டம் ஒப்புதல் பெற்ற பிறகு தான நடைமுறைப்படுத்தப்படுகிறது.
5.ஊர் மன்றக்கூட்டம் ஆண்டிற்கு நான்கு(ஜனவரி 26, அக்டோபர் 2, ஆகஸ்ட் 15, மே 1) முறை நடைபெறும்.
6.மாவட்ட ஊராட்சி யின் குழுத் தலைவரே மாவட்டத் திட்டக்குழுவின் தலைவர் ஆவர்.
7.10000 மக்கள் தொகைக்கு மேலுள்ள ஊராட்சிகள்,பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன.
8.ஒரு லச்சத்திற்கு அதிகமான மக்கள் தொகை உள்ள பேரூர்கள் நகராட்சி ஆகச் செயல்படுகின்றன.
9.பல லட்சம் மக்கள் தொகையும்,பல்வேறு அலுவலகங்களும் அமைந்துள்ள பகுதியை மாநகராட்சி எனச் சொல்வர்.
10.மாநகராட்சித் தலைவர் மேயர் எனப்படுகிறார்.
11.கிராமப்புற உள்ளாட்சி என்பது ஊராட்சி,ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி.
12.நகர்ப்புற ஊராட்சி என்பது பேரூராட்சி,நகராட்சி மற்றும் மாநகராட்சி.



மக்கள் ஆட்சியும் மனித வளமும் மகளிர் அறிவாற்றலும்:
1.ஒரு நாட்டின் மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் பிரநிதிகளால் நடத்தப்படும்
ஆட்சியே மக்கள் ஆட்சி ஆகும்.
2.மக்கள் நடத்தும் ஆட்சியை குடியரசு,ஜனநாயகம் ஆட்சி என்பர்.
டாக்டர் முத்துலட்சுமி:
  • இவர் புதுக்கோட்டையில் பிறந்தார்.
  • சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண்மணி ஆவார்.
  • இவர் சட்டமன்ற சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
  • இவர் சட்ட மன்றத்தின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அனைத்து இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் பெண் தலைவர் ஆவார்.
  • இவர் லண்டன் ராயல் புற்றுநோய் மருத்துவமனையில் பயின்றார்.
  • அடையாறில் புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கினர்.
  • தேவதாசி மற்றும் குழந்தை திருமண முறைக்கு எதிராகப் போராடினர்.
  • அடையாறில் அவ்வை இல்லம் தொடங்கினர்.
  • தாம்பரத்தில் அனாதை இல்லம் கட்டினார்.
  • 1956 இல் பத்ம பூசன் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
  • டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் பெயரில் தாய்,சேய் நலன் காக்கும் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.


 

No comments:

Post a Comment